யாப்பறிவோம்---2;1
1.யாப்பிலக்கணம் என்றால் என்ன? விளக்குக
தமிழ்மொழியின் இலக்கணம் ஐவகையாகப் பாகுபடுத்தப்படுகிறது. 1.எழுத்திலக்கணம்
2.சொல்லிலக்கணம்
3.பொருளிலக்கணம்
4.யாப்பிலக்கணம்
5. அணியிலக்கணம்.
இவற்றுள் யாப்பிலக்கணம் தமிழில் மரபுப்பாக்களை இயற்றுவதற்கு பயன்படும் இலக்கணம் ஆகும்.
தமிழ்மொழியின் இலக்கியக்கட்டமைப்பை, பாட்டின் ஓசை ஒழுங்குகளை யாப்பிலக்கணம் வரையறை செய்கிறது.






