பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

23 Sept 2015

யாப்பறிவோம்---2;1



யாப்பறிவோம்---2;1

1.யாப்பிலக்கணம் என்றால் என்ன? விளக்குக
தமிழ்மொழியின் இலக்கணம் ஐவகையாகப் பாகுபடுத்தப்படுகிறது. 1.எழுத்திலக்கணம் 
2.சொல்லிலக்கணம் 
3.பொருளிலக்கணம் 
4.யாப்பிலக்கணம் 
5. அணியிலக்கணம்.

இவற்றுள் யாப்பிலக்கணம் தமிழில் மரபுப்பாக்களை இயற்றுவதற்கு பயன்படும் இலக்கணம் ஆகும்.
தமிழ்மொழியின் இலக்கியக்கட்டமைப்பை, பாட்டின் ஓசை ஒழுங்குகளை யாப்பிலக்கணம் வரையறை செய்கிறது.

மரபைப் போற்று 2


தொடர்ச்சி...

நன்றாகச் சிந்தித்துப் பாரீர் இந்த
       ஞாலத்தில் முதன்மொழியாய்ச் சிறப்ப டைந்து
பன்னூறு பனுவல்கள் கொடுத்த தென்றால்
       பாரெங்கும் அம்மொழியே ஓங்க வேண்டும்.
பொன்றாத வழிபோற்றி வாழ்வோ மானால்
       புரையோடிப் போய்விட்ட புண்ணென் றாவோம்
இன்றிங்குப் புதுக்கவியைத் தம்ம னத்தில்
       ஏற்கின்ற நண்பர்கள் உணர்தல் வேண்டும்.!

யாப்பறிவோம் 1



தமிழ் வணக்கம் !

எழுத்தும் அறியேன்யான் யாப்பும் அறியேன்
பழுத்த புலவர்  பலரிருக்கப் பாவலர் 
என்னை  இழுத்திட்டார்! இப்பணியைச் செய்யவிட்டார்!
அன்னைத் தமிழே அருள்!

தொல்காப்பியம்--- பொருளதிகாரம்--- செய்யுளியல்

21 Sept 2015

பாட்டியற்றுக 5




நண்பர்களே.! கவிஞர்களே.!
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 5" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!

***** ***** *****
பாட்டியற்றுக : 5

நேரிசை ஆசிரியப் பா
***************************
ஆங்கில மென்னும் அயல்மொழிப் பிடியில்
தூங்கிடும் நிலைமை துகள்துக ளாகத்
தெறிபட வுடைக்கும் செம்மையைத் தருக
நெறியுடன் வாழும் நிலையினில் சேர்த்த
செந்தமிழ்த் தாயே.! செந்தமிழ்த் தாயே.!
வந்தெனக் கோர்வரம் வழங்கிட வேண்டும்
தன்னிக ரில்லாத் தமிழினம்
நன்னிலைப் பெற்றே நனிசிறந் திடவே.


20 Sept 2015

யாப்பறிவோம்




முன்னுரை
தொல்காப்பியம்
தமிழ்மொழியில் நமக்குக் கிடைத்த முதல்நுõலும் முழுமையான நுõலும் தொல்காப்பியம் ஆகும்.ஒருமொழிக்கு இலக்கணம் எழுத விரும்பும் ஓர் ஆசிரியர் பொதுவாக அம்மொழியின் எழுத்துகளுக்கும்(Phonology) அவ்வெழுத்துகளால் உருவாகும் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும்தாம்(Morphology) இலக்கணம் படைப்பார்.
தமிழ் மொழியின் முதல்நுõலான தொல்காப்பியம் தமிழன் பேசிய தமிழ்மொழிக்கு மட்டும் இலக்கணம் படைத்ததோடு நில்லாமல் அவனது வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த பெருமையை உடையது.
தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் தமிழனின் வாழ்வியல் பற்றி இலக்கியச் சுவைபடப்பேசுகிறது.அதனால்தான் நமது முதல் பாட்டனாராகிய தொல்காப்பியரை நாம் போற்றி மதித்து வணங்குகிறோம்.
இதனால்தான் என்னுடைய பேராசிரியர் மூதறிஞர் வ.சுப மாணிக்கனாரும் “தொல்காப்பியம் ஓர் இலக்கண இலக்கிய நுõல்“ என்பார்.
தமிழ்மொழியில் தோன்றிய அனைத்து இலக்கிய இலக்கணநுõல்களுக்கும் அவற்றின் வகைமைகளுக்கும் அடிப்படையான நுõல் தொல்காப்பியமே.
(தொல்காப்பியத்தின் மேல் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடு காரணமாகவும் தொல்காப்பியர்மேல் எனக்கு ஏற்பட்ட மரியாதை காரணமாகவும் என்முதல் மகனுக்குத் “ தொல்காப்பியன்“
எனப்பெயர் சூட்டினேன்.)

தொல்காப்பியத்தின் முப்பெரும்பிரிவுகள்
தொல்காப்பியம் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டு விளங்குகிறது.

1.எழுத்ததிகாரம்( Phonology)
2.சொல்லதிகாரம்((Morphology)
3.பொருளதிகாரம்(Matters)

பாட்டியற்றுக 4 இன் தொகுப்பு.


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 4 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 4

பாட்டியற்றுக 4‬



நண்பர்களே.! கவிஞர்களே.!
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 4" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!

***** ***** *****
பாட்டியற்றுக : 4