25 Oct 2016
24 Oct 2016
21 Oct 2016
20 May 2016
சிந்துபாடுக 9 இன் தொகுப்பு ( காவடிச் சிந்து 3 )
அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே!
சிந்துப்பாடுக. - 9 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. #பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
சிந்துபாடுக- 9 ( காவடிச் சிந்து 3 )
அன்பு நண்பர்களே! கவிஞர்களே!
புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:"#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும்.
சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.
சிந்து பாடுக - 9
******************
புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:"#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும்.
சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.
சிந்து பாடுக - 9
******************
13 May 2016
கம்பன் கவிநயம் 4. கம்பரின் அறிவியல் சிந்தனை
கம்பரின் அறிவியல் சிந்தனையை ஏற்கனவே ஒரு பாடலில் கண்டோம். (வெள்ளெருக்கஞ் சடைமுடியான்)
இன்று வேறொரு பாடலில் கம்பரின் அறிவியல் சிந்தனையைப் பார்க்கலாம்.
கல்வியில் பெரியவன் கம்பன் என்றார்களே! ...சும்மாவா சொன்னார்கள். அனைத்துத் துறைகளிலும் கற்றுத் துறைபோகிய காரணத்தாலல்லவோ அப்படிச் சொன்னார்கள்?
இன்று கண்டுபிடிக்கப்படும் பல கண்டுபிடிப்புகளை அன்றே கண்டறிந்து தன் காப்பியத்தில் பதிவிட்டவர் கம்பர் பெருமான்.
இதோ இன்னொரு பாடல்...
கும்மிப் பாடலில் வெண்டளை வேண்டுமா?
இசைத்தமிழ் வடிவமான சிந்துப் பாடல்களில் ஒன்றான "கும்மிப் பாடல்களில் " வெண்டளை வரவேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். யாப்புத் தொடர்பான தற்கால நூல்களிலும் இந்தக் கருத்துள்ளது.
ஆனால் "கும்மிப் பாட்டில் "வெண்டளை கட்டாயமில்லை என்பதே என் கருத்து. இக்கருத்து இரா.திருமுருகனாரின் வழியொட்டியது. பாடிப் பார்த்துணர்ந்த என் பயிற்சியின் வாயிலாகக் கண்டது.
"இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் நீங்கள்
எல்லோரும் வாருங்கள் தோழர்களே!"
Subscribe to:
Posts (Atom)






