அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.!
பாட்டியற்றுக:02 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--02
(குறள்வெண்பா)
1.கவிஞர் Sachithananthan Kuganathan
எண்ணத்திற் சீர்கள் எழுந்து நடைபயில
வெண்பா வருமே விரைந்து
★
2.கவிஞர் Swarna Sabarikumar
இறைவன் அருளால் எடுத்த பிறப்பில்
மறைபொருள் காண்பதே மாண்பு.
★
3.கவிஞர் Anbudan Ananthi
முத்தமிழே மூலமே மூத்தவளே உன்னாலே
தித்திக்கும் எந்தன் பிறப்பு.
★
4.கவிஞர் Umaipalan Thiyagaraja
இன்பத் தமிழ்பருக ஈர்த்தணைத்தாய் சோலைக்கே
அன்னைத் தமிழே அழகு
★
5.கவிஞர் Balanethiram Kannan
கடலிலே மூழ்கையில் கைகொடுப் பாரும்
கடனுக்கு நீட்டிடார் கை
★
6.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி
பாட்டுக்குப் பாரதிபோல் பைந்தமிழ்ச் சோலையாம்
காட்டாற்று வெள்ளத்தில் கல்
★
7.கவிஞர் க.சந்தோஷ்குமார்
முப்பால் நெறிநின்று மூவுலகும் ஆழ்ந்தறிந்தால்
ஒப்பிலா வாழ்க்கை உயிர்க்கு
★
8.கவிஞர் CA Manimaran Kathiresan
தேவைக்காய் வந்திடும் தேடுபொருள் யாவையும்
சேவைக்காய்க் கொள்ளற் சிறப்பு
★
9.கவிஞர் திலகவதி
அன்பென்ற சொல்லால் அகிலமும் கட்டுண்டு
நன்றென்று நாட்டப் படும்
★★★