பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

31 Oct 2022

பாட்டியற்றுக_தொகுப்பு - 02 (புதியது )



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:02 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                       நன்றி.!

           *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--02 

              (குறள்வெண்பா)

1.கவிஞர் Sachithananthan Kuganathan 

எண்ணத்திற் சீர்கள் எழுந்து நடைபயில

வெண்பா வருமே விரைந்து

2.கவிஞர் Swarna Sabarikumar 

இறைவன் அருளால் எடுத்த பிறப்பில் 

மறைபொருள் காண்பதே மாண்பு.

3.கவிஞர் Anbudan Ananthi 

முத்தமிழே மூலமே மூத்தவளே உன்னாலே

தித்திக்கும் எந்தன் பிறப்பு.

4.கவிஞர் Umaipalan Thiyagaraja 

இன்பத் தமிழ்பருக ஈர்த்தணைத்தாய் சோலைக்கே

அன்னைத் தமிழே அழகு

5.கவிஞர் Balanethiram Kannan 

கடலிலே மூழ்கையில் கைகொடுப் பாரும் 

கடனுக்கு நீட்டிடார் கை

6.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

பாட்டுக்குப் பாரதிபோல் பைந்தமிழ்ச் சோலையாம்

காட்டாற்று வெள்ளத்தில் கல்

7.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

முப்பால் நெறிநின்று மூவுலகும் ஆழ்ந்தறிந்தால்

ஒப்பிலா வாழ்க்கை உயிர்க்கு

8.கவிஞர் CA Manimaran Kathiresan 

தேவைக்காய் வந்திடும் தேடுபொருள் யாவையும் 

சேவைக்காய்க்  கொள்ளற் சிறப்பு

9.கவிஞர் திலகவதி

அன்பென்ற சொல்லால் அகிலமும் கட்டுண்டு 

நன்றென்று நாட்டப் படும்

                                ★★★


#பாட்டியற்றுக_தொகுப்பு - 01 (புதியது )



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:01 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

    இந்த ஆண்டின் முதல் பயிற்சியின் தொகுப்பு இது. 

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                       நன்றி.!

           *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--01

       (குறள்வெண் செந்துறை)

1. கவிஞர் Anbudan Ananthi 

சிவமே சீவனே சிந்தையில் நின்றவா

தவமே புரிவேன் தருவாய் அருளே!

2.கவிஞர் Sachithananthan Kuganathan 

வேழ முகத்து விநாயகா வுன்பதந்

தாழப் பணிந்தேன் தமிழினிற் பாடவே!

3.கவிஞர் Umaipalan Thiyagaraja 

உமையொரு பாகம் உடையாய் நீயே

அமைதி தருவாய் அகிலத் தரனே!

4.கவிஞர் Swarna Sabarikumar 

சங்கரன் மனமகிழ் சங்கரி உன்னருள்

எங்களை அரண்போல் என்றுமே காக்கவே!

5.கவிஞர் CA Manimaran Kathiresan 

வேலுடன் நின்றவா வேதனை அகற்றவா

வேலும் மயிலும் வேண்டும் துணையே!

6.கவிஞர் Kannan Balanethiram 

மனத்திலே திடமும் மகிழ்வுட னுளமும்

தினமுமே தருவாய் தில்லையம் பலனே

7.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

வினையின் பயனால் விளைந்தேன் முருகா

வினைகள் ஒழித்துயர் வீடளித் தேற்கவே

8.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

ஏறு முகமாய் ஏற்றி விடவே

ஆறு முகமே அருளைத் தருகவே

9.கவிஞர் திலகவதி

மாயக் கண்ணனே மரகத வண்ணனே

காயம் பொய்யே காத்திடு நீயே

                                ★★★