நண்பர்களே! கவிஞர்களே! மிகவும் கடினமான பாடல்களைப் பயிலும் இந்தப் பகுதியை மீண்டும் தொடர்வதில் மிக்க மகிழ்வடைகிறேன். பைந்தமிழ்ச் செம்மல்கள் உட்பட பொருள்பொதிந்த பாவியற்றும் ஆற்றலுடைய அனைவரும் இதில் பங்குபெறலாம். புதிதாகக் கற்பவர் விரும்பினால் முயலலாம். #ஒற்றுப்_பெயர்த்தல் ***********-************ ஒற்றுப் பெயர்த்தல் என்பது, சித்திரக்கவிகளுள் ஒன்று. அஃதாவது, முழுப்பாடலும் முதலில் ஒரு பொருளைத் தர, அதையே மீண்டும் அப்பொருளொழிய வேறு பொருள் தருமாறு பாடுவது. நேரிசை வெண்பா உண்ணாருங் கொள்ளுமே ஒண்சீர் மணத்திசையப் பண்ணார் அசைவுறும் பாணீயும் - கண்ணாரும் ஆவலுறும் பாங்கில் அழகாய்த் திகழ்ந்திடுதேன் பாவலரின் சோலை யிது! மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் இப்பாடலை, உள்ளே நாரினையுடைய செடிகள் தெளிந்ததோர் நல்ல மணத்தினை வீசவும், பாட்டிசைத்துப் பறக்கும் ஈக்களும், கண்போரை மீண்டும் காணத் தூண்டும் அழகுடன் மிளிர்வது தேன் பாவ மலர்கின்ற இந்த இனிய மலர்ச் சோலையாகும். என்று ஒரு பொருள்படவும்., (சுவைக்க) எண்ணாதவரையும் ஈர்த்துத் தெளிந்த சீர்கள் மணக்கவும், பாக்கள் ஆர்க்கும் அசையுடன் கூடிய பாக்களைத் தருவதாகிய, காண்போரை ஈர்க்கும் பாங்கில் அமைந்தது இந்தத் தேன் பா அலர் இன்சோலையாகும்.(பாவலரின் சோலை எனினுமாம்) என்ற பொருள்படவும் ஒற்றுப் பெயர்க்கலாம்.(ஒன்றை இன்னொன்றாகப் பெயர்த்தல்) . அருஞ்சொற்பொருள் : உண்ணார் - (சுவைக்க)எண்ணாதவர், உள்நார் பண்ணார் - பண் ஆர்க்கும், பாட்டிசை கண்ணார் - காண்பவர் பாணீயும் - பாடல் தரும், பாடும் ஈயும் பாவலர் - பா அலர், பாவு அலர். *** *** காளமேகத்தின்... கத்துகடல் சூழ்நாகை காத்தன்தன் சத்திரத்தில்... என்ற பாடல் இதே வகைதான். முயன்றால் முடியாதது எதுவுமில்லை... முயன்று பார்க்கலாமே!
நான் முன்பே குறிப்பிட்டது போல் இப்பாடலை 210 சீர்களாகவே எழுதினேன். ஆனால் வள்ளலாரின் 'திருவடிப் புகழ்ச்சியை ' (192 சீர் விருத்தம்) மீறி எழுத என் மனம் இசையவில்லை. எனவே, 189 சீர்களாகக்
சோலைவாழ் கவிஞர்கட்கு வணக்கம். "கவி " வடமொழி என்று அண்மையில் திரு. குறளோவியன் கல்லார் சாத்தப்பன் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டார். அதற்கு அருளியாரின் கூற்றையும், பாவாணரின் ஆய்வையும் காட்டினார்
அன்பு நண்பர்களே ! சோலைக் கவிஞர்களே! சிந்துப்பாடுக. - 9 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக. பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. #பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும். கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:"#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். ★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன. சிந்து பாடுக - 9 ******************
கம்பரின் அறிவியல் சிந்தனையை ஏற்கனவே ஒரு பாடலில் கண்டோம். (வெள்ளெருக்கஞ் சடைமுடியான்) இன்று வேறொரு பாடலில் கம்பரின் அறிவியல் சிந்தனையைப் பார்க்கலாம். கல்வியில் பெரியவன் கம்பன் என்றார்களே! ...சும்மாவா சொன்னார்கள். அனைத்துத் துறைகளிலும் கற்றுத் துறைபோகிய காரணத்தாலல்லவோ அப்படிச் சொன்னார்கள்? இன்று கண்டுபிடிக்கப்படும் பல கண்டுபிடிப்புகளை அன்றே கண்டறிந்து தன் காப்பியத்தில் பதிவிட்டவர் கம்பர் பெருமான். இதோ இன்னொரு பாடல்...
இசைத்தமிழ் வடிவமான சிந்துப் பாடல்களில் ஒன்றான "கும்மிப் பாடல்களில் " வெண்டளை வரவேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். யாப்புத் தொடர்பான தற்கால நூல்களிலும் இந்தக் கருத்துள்ளது. ஆனால் "கும்மிப் பாட்டில் "வெண்டளை கட்டாயமில்லை என்பதே என் கருத்து. இக்கருத்து இரா.திருமுருகனாரின் வழியொட்டியது. பாடிப் பார்த்துணர்ந்த என் பயிற்சியின் வாயிலாகக் கண்டது. "இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் நீங்கள் எல்லோரும் வாருங்கள் தோழர்களே!"
அன்பு நண்பர்களே ! சோலைக் கவிஞர்களே! சிந்துப்பாடுக. - 8 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக. பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. #பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும். கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.: "#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். ★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.
அன்பு நண்பர்களே ! சோலைக் கவிஞர்களே! சிந்துப்பாடுக. - 7 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக. பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்... இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா.#பாடிப்பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும். கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.: "#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். ★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.
அன்பு நண்பர்களே ! சோலைக் கவிஞர்களே! சிந்துப்பாடுக. - 6 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக. பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்... இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும். கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.: "#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். ★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.
அன்பு நண்பர்களே ! சோலைக் கவிஞர்களே! சிந்துப்பாடுக. - 5 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக. பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்... இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும். கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.: "#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். ★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.
அன்பு நண்பர்களே ! சோலைக் கவிஞர்களே! சிந்துபாடுக. - 4 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும்நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக. பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்... இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும். கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.: "#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். ★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.
அன்பு நண்பர்களே ! சோலைக் கவிஞர்களே! சிந்து பாடுக. - 3 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். புதிய யாப்பைப் பயில்கின்றஆர்வம் பலரிடத்தே இருந்ததைக் காண முடிந்தது. அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக. பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்... இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும். கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.: "#சிந்துபாடுக இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். ★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன. சிந்து பாடுக - 3 *************** (கும்மிச் சிந்து)
அன்பு நண்பர்களே ! சோலைக் கவிஞர்களே! சிந்துப்பாடுக இரண்டாம் பயிற்சி செவ்வனே முடிந்தது.பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். புதிய யாப்பைப் பயில்கின்றஆர்வம் பலரிடத்தே இருந்ததைக் காண முடிந்தது. அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக. பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்... இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும். கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.: "#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். ★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.
.....நிறைவு "ஆண்டவனே என்கலக்கம் தீர்ந்த தையா அடிமனத்தின் சுமைகூடக் குறைந்த தையா வேண்டுதலும் பொதுநலமாய் இருக்கும் போது வேண்டுவரம் தருவாயென் றறிந்து கொண்டேன் தூண்டுதலே இல்லாமல் மக்கள் தங்கள் துடித்தெழும்பும் ஆற்றலாலும் அன்பி னாலும் நீண்டநாள்கள் துன்பமின்றி வாழ்வார் என்றீர் நீங்கியதென் ஐயங்கள் நன்றி " என்றேன்.!
அன்பு நண்பர்களே ! சோலைக் கவிஞர்களே! சிந்துப்பாடுக முதல் பயிற்சி செவ்வ னே முடிந்தது. பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். புதிய யாப்பைப் பயில்கின்றஆர்வம் பலரிடத்தே இருந்ததைக் காண முடிந்தது. அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக. முதல் பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்... இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும். கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
★அன்பு நண்பர்களே! கவிஞர்களே! புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.: பாட்டியற்றுக பயிற்சி அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பெற்றது. வெற்றிபெற உதவிய அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். "#சிந்துப்பாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். ★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். மேல் விவரம் வேண்டுவோர் முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும். சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.
நிறைவுரை. ************* பாட வேறுபாடுகள் : பிற நூலாசிரியர் வழி விவாதங்கள் தள்ளப்படும் என்றதற்குக் காரணமுண்டு. இயல்பான இசைப்பாடல் வடிவங்களான சிந்துப் பாடல்களை, சீர், தளை, யாப்பு எனத் தளையிட்டு மக்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் போக்கே அவற்றிற்கு "யாப்பியல் வழி "இலக்கணம் வகுப்பதாகும். அந்த வழி விவாதங்கள் பெரு வேறுபாடு கொண்டிருக்கும் என்பதால் விவாதத்தில் தீர்வு கிடைக்காது.
பாடம் - 2 ********** சிந்து - இலக்கணம் பாமர மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சிந்துப் பாடல்கள் அவர்தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததால், அவற்றில் இலக்கியச் சொற்கள் அதிகமின்றி வழக்குச் சொற்களே அதிகமிருந்தன. கொச்சைச் சொற்களும் கலந்திருந்தன...ஆனால் அவை எதுகை, மோனை, இயைபு நயம் நோக்கி ஆளப்பெற்றன. தெரிசனம் (தரிசனம்) , தெசரதன் (தசரதன்) போன்று மோனைக்கும், எதுகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றன. இவ்வாறான பாடல்கள் வாய்வழியாக, செவி வழியாகவே இருந்தன. அவற்றிற்கென இலக்கணம் வகுக்கப்படாததால், பின்வந்த பாட்டியல் நூலோர் ஏதும் வகுத்தாரில்லை. அ.கி.பரந்தாமனார், புலவர் குழந்தை போன்றோர் சிந்துப் பாடல்களுக்கு அவை வழங்கப்பட்ட முறைமையினான் வகுத்த இலக்கணமும் சரியான முறையில் அமையவில்லை. பல முரணான விதிகளும் வகுத்தனர். (சான்று : கும்மிச் சிந்துக்கு வெண்டளை வேண்டும் என்றது)
பாடம் : 1 ********** நாட்டுப்புற மக்களின் உரிமைச் சொத்தாகிய நாட்டுப்புறப் பாடல் வகையைச் சேர்ந்தவை"சிந்துப் பாடல்கள் ". யாப்பியல் நூல்களில் கூறப்பட்ட பாவகைகளின் இலக்கணக் கட்டுக் கோப்புகளில் அடங்காமல், தங்கள் மனத்தில் எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடாக, வடிகாலாகப் பாமர மக்கள் இப்பாடல்களைப் பாடிவந்தனர். இலக்கியத்திற்கே இலக்கணம் என்கின்ற தொல்காப்பியரின் பண்பு இப்பா வகைகளுக்குப் பொருந்தும். ஏனெனில் இவற்றை யாப்பியல் கூறுகளான தேமா, புளிமா போன்றவற்றால் அடக்க முடியாது. அவற்றில் இவை அடங்காது. பண், பண்ணத்தி, தோல், பாட்டு போன்ற சொற்களால் தொல்காப்பியர் இவற்றைப் பொதுவாக அடக்கினாரேயன்றி அவற்றிற்கு இலக்கணம் வகுத்தாரில்லை. அவை நாட்டுப்புறப் பாமரர்களின் உணர்வில் கலந்த உரிமை முழக்கங்கள். தங்கள் வாழ்வில் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு, திருமணம், பூப்புனித நீராட்டு, கோயில் திருவிழாக்கள், உழவுத் தொழிலில் ஈடுபடும் போது, நெடுந்தொலைவு நடைபயணத்தின் போது அம்மக்கள் இந்தப் பாடல்களைப் பாடினர். சந்தத்துடன் அவை இசைத்துப் பாடக் கூடியவை என்பதால் "இசைத்தமிழ் " வகையில் அவற்றை அடக்கலாம்.
சுயநலமாய் வாழ்கின்றோர் பரம ஏழை தூய்மையிலா உள்ளத்தார் ஏழை.! நாட்டில் கயமையினைப் புரிகின்ற கசடர் ஏழை கருணையிலா மனங்கொண்டோர் ஏழை! போதை மயக்கத்தாற் பொறுப்பின்றி வாழ்வோர் ஏழை மானுடத்தைக் கொன்றொழிக்கும் மாக்கள் ஏழை நயமாகப் பேசிப்பின் நட்பைக் கொல்லும் நரிக்குணத்தைக் கொண்டவர்கள் ஏழை தம்பீ!
நிறைவு பயிற்சி... அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 25 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது. பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே. கவிஞர்களை வாழ்த்துங்கள். கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள். பாட்டியற்றுக : 25
நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 25" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
இக்கவிதை, 28/01/2012 அன்று திருநெல்வேலி மாவட்டம் திருமலாபுரம், வடக்குத்தியான் ஆலயக் குடமுழுக்கு விழாவின் "சிறப்புக் கவியரங்கில் " பங்கேற்ற என் கவிதை. பொதுத் தலைப்பு : இறைவன் இருப்பது யாராக..,! 1. தாயாக 2. தந்தையாக 3. ஆசானாக 4. தோழனாக 5. காதலனாக. என் தலைப்பு... கடவுள் என் தோழன் (1) ************************* யாராக ஆண்டவனும் இருக்கின் றானென் றருமையான தலைப்பொன்றைத் தந்துள் ளார்கள் வேரோடி வளர்ந்திருக்கும் மரங்க ளுக்கு மேல்தெரியும் இலையாலே பெயரை வைப்பர் பேரோடு திரிகின்ற மனித ரெல்லாம் பேரொளியின் வேராலே வளர்ந்த வைதாம் யாராக இறைவனைநாம் காண்கின் றோமோ அப்படியே கண்களுக்குத் தெரியும் தெய்வம்.!
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 24 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது. பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே. கவிஞர்களை வாழ்த்துங்கள். கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள். பாட்டியற்றுக : 24 சமநிலை மருட்பா (கைக்கிளை) ****************