பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

25 Dec 2015

எளிதாகக் கற்பிப்பீர்!


இலக்கணத்தைக் கற்பதற்கு முயன்றி டாமல்
         இளையோர்கள் அதைவேம்பாய் எண்ணிக் கொண்டு
விலக்குகிறார்.,விலகுகிறர் மரபை விட்டு.
         விளக்குதற்கென் றாரேனும் இருந்தால் தானே
துலங்குவழி கண்டுணர்ந்து கவிதை செய்வார்?
         துணிவாக இலக்கணத்தைத் தேடிக் கற்பார்?
கலங்கரையின் விளக்காகக் கற்பிப் போர்கள்
        கலக்கத்தை விரட்டுதலை முதலாய்க் கொள்க!

21 Dec 2015

11) பாய்புனல் பரந்தது




வணக்கம் பாவலர்களே...
இந்த வார ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இதோ இவ்வாரத் தேன்றுளி.
12) பாய்புனல் பரந்தது.

19 Dec 2015

பாட்டியற்றுக - 16


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளில் ஒன்றான பாட்டியற்றுக பகுதி 16 இல் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இயலாதவர்கள் சுவைக்கவும், மற்ற நண்பர்களுக்குப் பகிரவும் கேட்டுக் கொள்கிறேன்.
பாட்டியற்றுக : 16
(தரவு கொச்சகக் கலிப்பா)

பாட்டியற்றுக : 16 இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 16 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.கவிஞர்களை வாழ்த்துங்கள். கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 16
தரவு கொச்சகக் கலிப்பா

18 Dec 2015

10) நன்கு அறிந்துகொள் !


அன்பர்களே !
இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ என்னும் இத்தொடரில் தங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகழ்ச்சி அடைகிறேன். இதோ இவ்வாரத்துத் துளி
11) நன்கு அறிந்துகொள் !
இறால் மீனின் பின் புறத்தைப் போன்ற சுரசுரப்பு மிகுந்த தன்மை உடையதுமாய்ச், சுறா மீனின் முகத்தில் தோன்றும் நீண்ட கொம்பினைப் போன்ற கூரான முட்களைக் கொண்டதுமாய் அந்தத் தாழம்பூ பூத்திருக்கிறது. அவ்வழகிய நெய்தல் நிலத்திற்கே சொந்தமான அந்தத் தாழம்பூ நல்லிதழ் மலர்த்து பூத்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது.

முயன்று பார்க்கலாம் : 2 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே ! 

முயன்று பார்க்கலாம் : 2 இன் தொகுப்பு அப்பயிற்சியில் முயன்ற கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்பெறுகிறது. மிகக் கடினமான இப்பா வகையைப் பலரும் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

முயன்று வெற்றி யடைய இயலாதவர்கள் மனந்தளர வேண்டா. உங்கள் முயற்சியே சிறந்த பயிற்சியாகும்.அரிதான ஒரு யாப்பைக் கற்பித்த நிறைவுடன் இத்தொகுப்பை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தொகுப்பைப் படித்துப் பார்த்துச் சுவையுங்கள். கவிஞர்களை வாழ்த்துங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்

முயன்று பார்க்கலாம் : 2

6 Dec 2015

பாட்டியற்றுக 15 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே!
அறிஞர் பலரும் போற்றும் பைந்தமிழ்ச் சோலையின் பாட்டியற்றுக பயிற்சியின் 15 ஆவது பகுதி மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய காரணத்தால் தொகுப்பை வெள்ளிக்கிழமை வெளியிட முடியவில்லை. வருந்துகிறேன்...
தொகுப்பைப் படித்து, மற்றவர்க்கும் பகிர்ந்து, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.
பாட்டை எழுதிய கவிஞரை வாழ்த்தினால் அது அவர்களை ஊக்கும்.
நன்றி!
தமிழன்புடன்
பாவலர் மா.வரதராசன்

9) வறுமை மாற்றம்


அன்பர்களே வணக்கம்,
இந்த வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். இது இவ்வாரத்துத் தேன்துளி

9) வறுமை மாற்றம்
அந்த நாளில் கண் திறக்காத சாய்ந்த காதுகளை உடைய அந்த நாய்க் குட்டிகள் பாலுக்காக ஏங்கித் தவித்துக் கொண்டு இருந்தன. எப்பொழுதும் போல நாயின் பாலை வேறு யாரும் கரைப்பதில்லை என்றாலும், அந்நாட்களில் அந்தத் தாய் நாயால் கூட அதன் பாலைச் சுரக்க முடியவில்லை . உண்ண உணவற்று அது உடல் மெலிந்து குட்டிகளுக்குப் பாலூட்ட இயலாதவாறு சத்தற்று இருந்தது. அந்தத் தாய் நாய் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு குட்டிகள் பாலருந்த நெருங்கி வரும் பொழுது தள்ளி விட முற்பட்டது. பசியால் செய்வதை அறியாத குட்டிகள் பாலை உண்ண முற்படும் பொழுது அந்தத் தாய் நாய் வலியால் குரைத்தது.

முயன்று பார்க்கலாம் - 2






முன்முடுகு வெண்பா
***********************
வெற்றுப்ப யற்சொற்ற இற்றுச்சொ லுட்பட்டு
முற்றுப்பெ றற்கெற்று மொத்தத்தி - லிற்றைக்கு
நாட்டை இழந்து நலங்கெட்ட எந்தமிழர்
மீட்சி யடைவர் மிளிர்ந்து.
--பாவலர் மா.வரதராசன்--
கருத்தூன்றுக
***************
இஃது சற்றே கடினமான யாப்பு வகை. நேரிசை வெண்பா தான். ஆனால் முன்னிரண்டு அடிகள் ஒருவித விரைவு நடையுடன் இலங்குகின்றன. இந்த விரைவு நடைக்கு "முடுகு " எனப்பெயர். முடுகு என்றால் விரைவு எனப்பொருள். இப்பாடல் முன்னிரண்டு அடிகளில் "தத்தத்த" என்ற சந்தத்துடன் முடுகி நடப்பதால் இது "முன்முடுகு வெண்பா " ஆகும்.
இசைப்பாக்களான சிந்துப்பாடல்கள் பலவும் முடுகியலைக் கொண்டு திகழும்.
முடுகியல் சந்தங் கொண்டு நடப்பதால் அவற்றை நாம் தேமா, புளிமா போன்ற வாய்ப்பாடுகளால் அளவிட முடியாது. மாத்திரை வேறுபட்டுச் சந்தம் தப்பி ஒலிக்கும். எனவே, முடுகியலைச் சந்த இலக்கணப்படியே வரையறை செய்தல் வேண்டும்.

1 Dec 2015

பாட்டியற்றுக - 15


நண்பர்களே.! கவிஞர்களே.! 
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 15" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***

பாட்டியற்றுக - 15
கலிவிருத்தம்
********-*-****
கவிதை யென்பது கற்பனை சேர்ப்பதும்
தவிப்ப தேயிலாத் தாய்மொழி யாக்கலில்
அவிழும் பூமணம் ஐம்புலன் சேர்வதாய்க்
குவிக்க வேண்டுமே கொள்கையொ டின்பமே!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***

8) கனாக் கண்டேன்



வணக்கம் தமிழுறவுகளே
இதோ இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாரத்துத் துளி
9) கனாக் கண்டேன்
"கோட்டை மதில்களை முட்டித் தகர்க்க வல்லதுவாய், இரு பெரிய தந்தங்களைக் கொண்டனவாய், களமாடி வீடு புகுந்து இருக்கும் வைக்கோல் போரினை ஒத்தனவாய் காட்சி தந்தன அங்கு வந்த ஆயிரம் யானைகளும். அந்த யானைகள் ஆயிரமும் சூழ்ந்து என்னை வலம் வந்தன. சூரியனைச் சுற்றும் கோள்களைப் போன்று, தண்ணீரில் கல்லெறிந்தால் உருவாகும் சுழலினைப் போன்று, மலரினை ரீங்காரமிடும் தேனீக்கள் சுற்றுவது போன்று அந்த ஆயிரம் யானைகளும் என்னைச் சுற்றிச் சுழன்று சூழ்ந்து வலம் வந்தன.