முன்முடுகு வெண்பா
***********************
வெற்றுப்ப யற்சொற்ற இற்றுச்சொ லுட்பட்டு
முற்றுப்பெ றற்கெற்று மொத்தத்தி - லிற்றைக்கு
நாட்டை இழந்து நலங்கெட்ட எந்தமிழர்
மீட்சி யடைவர் மிளிர்ந்து.
--பாவலர் மா.வரதராசன்--
கருத்தூன்றுக
***************
இஃது சற்றே கடினமான யாப்பு வகை. நேரிசை வெண்பா தான். ஆனால் முன்னிரண்டு அடிகள் ஒருவித விரைவு நடையுடன் இலங்குகின்றன. இந்த விரைவு நடைக்கு "முடுகு " எனப்பெயர். முடுகு என்றால் விரைவு எனப்பொருள். இப்பாடல் முன்னிரண்டு அடிகளில் "தத்தத்த" என்ற சந்தத்துடன் முடுகி நடப்பதால் இது "முன்முடுகு வெண்பா " ஆகும்.
இசைப்பாக்களான சிந்துப்பாடல்கள் பலவும் முடுகியலைக் கொண்டு திகழும்.
முடுகியல் சந்தங் கொண்டு நடப்பதால் அவற்றை நாம் தேமா, புளிமா போன்ற வாய்ப்பாடுகளால் அளவிட முடியாது. மாத்திரை வேறுபட்டுச் சந்தம் தப்பி ஒலிக்கும். எனவே, முடுகியலைச் சந்த இலக்கணப்படியே வரையறை செய்தல் வேண்டும்.