பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

25 Dec 2015

எளிதாகக் கற்பிப்பீர்!


இலக்கணத்தைக் கற்பதற்கு முயன்றி டாமல்
         இளையோர்கள் அதைவேம்பாய் எண்ணிக் கொண்டு
விலக்குகிறார்.,விலகுகிறர் மரபை விட்டு.
         விளக்குதற்கென் றாரேனும் இருந்தால் தானே
துலங்குவழி கண்டுணர்ந்து கவிதை செய்வார்?
         துணிவாக இலக்கணத்தைத் தேடிக் கற்பார்?
கலங்கரையின் விளக்காகக் கற்பிப் போர்கள்
        கலக்கத்தை விரட்டுதலை முதலாய்க் கொள்க!

21 Dec 2015

11) பாய்புனல் பரந்தது




வணக்கம் பாவலர்களே...
இந்த வார ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இதோ இவ்வாரத் தேன்றுளி.
12) பாய்புனல் பரந்தது.

19 Dec 2015

பாட்டியற்றுக - 16


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளில் ஒன்றான பாட்டியற்றுக பகுதி 16 இல் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இயலாதவர்கள் சுவைக்கவும், மற்ற நண்பர்களுக்குப் பகிரவும் கேட்டுக் கொள்கிறேன்.
பாட்டியற்றுக : 16
(தரவு கொச்சகக் கலிப்பா)

பாட்டியற்றுக : 16 இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 16 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.கவிஞர்களை வாழ்த்துங்கள். கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 16
தரவு கொச்சகக் கலிப்பா

18 Dec 2015

10) நன்கு அறிந்துகொள் !


அன்பர்களே !
இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ என்னும் இத்தொடரில் தங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகழ்ச்சி அடைகிறேன். இதோ இவ்வாரத்துத் துளி
11) நன்கு அறிந்துகொள் !
இறால் மீனின் பின் புறத்தைப் போன்ற சுரசுரப்பு மிகுந்த தன்மை உடையதுமாய்ச், சுறா மீனின் முகத்தில் தோன்றும் நீண்ட கொம்பினைப் போன்ற கூரான முட்களைக் கொண்டதுமாய் அந்தத் தாழம்பூ பூத்திருக்கிறது. அவ்வழகிய நெய்தல் நிலத்திற்கே சொந்தமான அந்தத் தாழம்பூ நல்லிதழ் மலர்த்து பூத்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது.

முயன்று பார்க்கலாம் : 2 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே ! 

முயன்று பார்க்கலாம் : 2 இன் தொகுப்பு அப்பயிற்சியில் முயன்ற கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்பெறுகிறது. மிகக் கடினமான இப்பா வகையைப் பலரும் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

முயன்று வெற்றி யடைய இயலாதவர்கள் மனந்தளர வேண்டா. உங்கள் முயற்சியே சிறந்த பயிற்சியாகும்.அரிதான ஒரு யாப்பைக் கற்பித்த நிறைவுடன் இத்தொகுப்பை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தொகுப்பைப் படித்துப் பார்த்துச் சுவையுங்கள். கவிஞர்களை வாழ்த்துங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்

முயன்று பார்க்கலாம் : 2

6 Dec 2015

பாட்டியற்றுக 15 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே!
அறிஞர் பலரும் போற்றும் பைந்தமிழ்ச் சோலையின் பாட்டியற்றுக பயிற்சியின் 15 ஆவது பகுதி மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய காரணத்தால் தொகுப்பை வெள்ளிக்கிழமை வெளியிட முடியவில்லை. வருந்துகிறேன்...
தொகுப்பைப் படித்து, மற்றவர்க்கும் பகிர்ந்து, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.
பாட்டை எழுதிய கவிஞரை வாழ்த்தினால் அது அவர்களை ஊக்கும்.
நன்றி!
தமிழன்புடன்
பாவலர் மா.வரதராசன்

9) வறுமை மாற்றம்


அன்பர்களே வணக்கம்,
இந்த வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். இது இவ்வாரத்துத் தேன்துளி

9) வறுமை மாற்றம்
அந்த நாளில் கண் திறக்காத சாய்ந்த காதுகளை உடைய அந்த நாய்க் குட்டிகள் பாலுக்காக ஏங்கித் தவித்துக் கொண்டு இருந்தன. எப்பொழுதும் போல நாயின் பாலை வேறு யாரும் கரைப்பதில்லை என்றாலும், அந்நாட்களில் அந்தத் தாய் நாயால் கூட அதன் பாலைச் சுரக்க முடியவில்லை . உண்ண உணவற்று அது உடல் மெலிந்து குட்டிகளுக்குப் பாலூட்ட இயலாதவாறு சத்தற்று இருந்தது. அந்தத் தாய் நாய் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு குட்டிகள் பாலருந்த நெருங்கி வரும் பொழுது தள்ளி விட முற்பட்டது. பசியால் செய்வதை அறியாத குட்டிகள் பாலை உண்ண முற்படும் பொழுது அந்தத் தாய் நாய் வலியால் குரைத்தது.

முயன்று பார்க்கலாம் - 2






முன்முடுகு வெண்பா
***********************
வெற்றுப்ப யற்சொற்ற இற்றுச்சொ லுட்பட்டு
முற்றுப்பெ றற்கெற்று மொத்தத்தி - லிற்றைக்கு
நாட்டை இழந்து நலங்கெட்ட எந்தமிழர்
மீட்சி யடைவர் மிளிர்ந்து.
--பாவலர் மா.வரதராசன்--
கருத்தூன்றுக
***************
இஃது சற்றே கடினமான யாப்பு வகை. நேரிசை வெண்பா தான். ஆனால் முன்னிரண்டு அடிகள் ஒருவித விரைவு நடையுடன் இலங்குகின்றன. இந்த விரைவு நடைக்கு "முடுகு " எனப்பெயர். முடுகு என்றால் விரைவு எனப்பொருள். இப்பாடல் முன்னிரண்டு அடிகளில் "தத்தத்த" என்ற சந்தத்துடன் முடுகி நடப்பதால் இது "முன்முடுகு வெண்பா " ஆகும்.
இசைப்பாக்களான சிந்துப்பாடல்கள் பலவும் முடுகியலைக் கொண்டு திகழும்.
முடுகியல் சந்தங் கொண்டு நடப்பதால் அவற்றை நாம் தேமா, புளிமா போன்ற வாய்ப்பாடுகளால் அளவிட முடியாது. மாத்திரை வேறுபட்டுச் சந்தம் தப்பி ஒலிக்கும். எனவே, முடுகியலைச் சந்த இலக்கணப்படியே வரையறை செய்தல் வேண்டும்.

1 Dec 2015

பாட்டியற்றுக - 15


நண்பர்களே.! கவிஞர்களே.! 
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 15" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***

பாட்டியற்றுக - 15
கலிவிருத்தம்
********-*-****
கவிதை யென்பது கற்பனை சேர்ப்பதும்
தவிப்ப தேயிலாத் தாய்மொழி யாக்கலில்
அவிழும் பூமணம் ஐம்புலன் சேர்வதாய்க்
குவிக்க வேண்டுமே கொள்கையொ டின்பமே!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***

8) கனாக் கண்டேன்



வணக்கம் தமிழுறவுகளே
இதோ இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாரத்துத் துளி
9) கனாக் கண்டேன்
"கோட்டை மதில்களை முட்டித் தகர்க்க வல்லதுவாய், இரு பெரிய தந்தங்களைக் கொண்டனவாய், களமாடி வீடு புகுந்து இருக்கும் வைக்கோல் போரினை ஒத்தனவாய் காட்சி தந்தன அங்கு வந்த ஆயிரம் யானைகளும். அந்த யானைகள் ஆயிரமும் சூழ்ந்து என்னை வலம் வந்தன. சூரியனைச் சுற்றும் கோள்களைப் போன்று, தண்ணீரில் கல்லெறிந்தால் உருவாகும் சுழலினைப் போன்று, மலரினை ரீங்காரமிடும் தேனீக்கள் சுற்றுவது போன்று அந்த ஆயிரம் யானைகளும் என்னைச் சுற்றிச் சுழன்று சூழ்ந்து வலம் வந்தன.

28 Nov 2015

"சோலைக் கவியரங்கம் " தலைப்புக்கள்



#‎அறிவிப்பு‬
"சோலைக் கவியரங்கம் "
சோலையின் மலர்களுக்கு வணக்கம். இதோ சோலைக் கவியரங்கம்.
பொதுத் தலைப்பு
"போற்றப்பட வேண்டியது..."
துணைத் தலைப்புகள்
அ. இயற்கை
ஆ. கடவுள்
இ. தாய்மை
ஈ. ஒழுக்கம்
விதிமுறைகள்.

பாட்டியற்றுக : 14 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! 14 வகை (அதற்கு மேலும்) யாப்பு வடிவங்களை இப்பகுதியில் நாம் அறிந்துள்ளோம். பலரும் இவற்றில் முழுமை பெற்றுள்ளனர் என்பதில் பெற்ற தாயின் பேருவகை கொள்கிறேன். (ஈன்ற பொழுதின்..?.) இன்னும் நிறைய உள்ளன. கற்போம், மகிழ்வாக.
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்தப் பயிற்சி அனைவருக்கும் மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கும். மிக எளிமையான யாப்பு வகையிது.
எத்தனை ஓசை நயம்! எத்தனையெத்தனை கருத்துகள்.! எவ்வளவு விவாதங்கள்! எண்ணுந்தோறும் இன்பம்! இன்பம்!! தொகுப்பைப் படித்துப் பாருங்கள் " யாம் பெற்றுள்ள இன்பத்தை நீங்களும் பெறுவீர்.இத்தொகுப்புக் கவிஞர்கள் அனுப்பிய வரிசையின்படியே வெளியிடப்படுகிறது. தரவரிசைப் படியன்று.வாழ்த்துங்கள்! கருத்தைக் கூறுங்கள்! பகிருங்கள்.
பயிற்சியில் கலந்து கொள்ளாத மற்ற உறுப்பினர்கள் இதையாவது செய்யலாமே!
பாட்டியற்றுக -14

சோலைக் கவியரங்கம்



அன்பு கவிஞர்களே! பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினர்களே! அனைவருக்கும் வணக்கம்..நம் பைந்தமிழ்ச் சோலையில்  "சோலைக் கவியரங்கம் " தொடங்கப்படுகிறது. விளக்கங்களை ஊன்றிப் படிக்கவும்.

பாட்டியற்றுக - 14


நண்பர்களே.! கவிஞர்களே.! 

அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 14" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக - 14
கலித்தாழிசை
********-*-*****
ஒருவழியுங் காணாமல் ஊமையராய் வாழும்
தெருவோர ஏழைகளின் சிக்கலினை ஆய்ந்தே
உருப்படியாய் வாழ உதவுகின்ற பாட்டே
உயர்தமிழ்ப்பா வேந்தர் உரைத்திட்ட பாட்டே!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***

25 Nov 2015

பாட்டியற்றுக : 13 இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே! 
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்தப் பயிற்சி அனைவருக்கும் மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கும்.எத்தனை ஓசை நயம்! எத்தனையெத்தனை கருத்துகள்.! எண்ணுந்தோறும் இன்பம்! இன்பம்!! இத்தொகுப்புக் கவிஞர்கள் அனுப்பிய வரிசையின்படியே வெளியிடப்படுகிறது. தரவரிசைப் படியன்று.
வாழ்த்துங்கள்! கருத்தைக் கூறுங்கள்! பகிருங்கள்.பயிற்சியில் கலந்து கொள்ளாத மற்ற உறுப்பினர்கள் இதையாவது செய்யலாமே!
பாட்டியற்றுக -13
காப்பியக் கலித்துறை

1. கவிஞர் வள்ளிமுத்து
வாளை யுருவிக் களமேபுக வாழ்த்து வாளே
தோளை நிமிர்த்தி யெறிவேல்பட மார்பை யேந்திக்
காளை யிறக்கக் கலங்காதவன் பீடு பேசித்
தாளை வணங்கித் தமிழ்பேசிடும் மூதின் முல்லை

7) மதுநோக்கும் பொதுநோக்கும்


வணக்கம்
இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதோ இவ்வாரத் தேன்றுளி.

8) மதுநோக்கும் பொதுநோக்கும்.

16 Nov 2015

6) தேவர் துயரறுத்தான் !


அன்புப் பாவலர்காள் !
வணக்கம் ! இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளிகள்‬ தொடரில் தங்கிச் சந்திக்க வந்துவிட்டேன். இதோ இவ்வாரத்து துளி
6) தேவர் துயரறுத்தான் !

பாட்டியற்றுக - 13


நண்பர்களே.! கவிஞர்களே.!
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 13" இதோ.!முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக - 13

எங்கும் தண்ணீர்! (அறுசீர் விருத்தம்)


தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் கண்டு எழுதியது.
எங்கும் தண்ணீர்! (அறுசீர் விருத்தம்)
சாலையில் எங்கும் தண்ணீர் 
       சந்துகள் முழுதும் தண்ணீர்
ஆலயத் துள்ளும் தண்ணீர்
      ஆண்டவன் மேலும் தண்ணீர்
ஓலையில் கூடத் தண்ணீர்
      ஓடையில் ஓடும் தண்ணீர்
ஆலையின் உள்ளும் தண்ணீர்
      ஆறெனத் தண்ணீர் தண்ணீர்!

5) வேனிலின் கார்காலம்


வளந்தமிழ்ப் பாவலர்க்கு என் வணக்கம்..!
இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பத்தில் மகிழ்வை அடைகிறேன். இதோ இவ்வாரத்துத் துளி
5) வேனிலின் கார்காலம்

பாட்டியற்றுக : 12 இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே!
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்தப் பயிற்சி அனைவருக்கும் மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கும்.எத்தனை ஓசை நயம்! எத்தனையெத்தனை கருத்துகள்.! எவ்வளவு விவாதங்கள்! எண்ணுந்தோறும் இன்பம்! இன்பம்!!
தொகுப்பைப் படிக்காதீர்கள்... "பாடிப் பாருங்கள் " யாம் பெற்றுள்ள இன்பத்தை நீங்களும் பெறுவீர்.

இத்தொகுப்புக் கவிஞர்கள் அனுப்பிய வரிசையின்படியே வெளியிடப்படுகிறது. தரவரிசைப் படியன்று.
வாழ்த்துங்கள்! கருத்தைக் கூறுங்கள்! பகிருங்கள்.
பயிற்சியில் கலந்து கொள்ளாத மற்ற உறுப்பினர்கள் இதையாவது செய்யலாமே!
பாட்டியற்றுக -12
கட்டளைக் கலித்துறை

4) மண்ணில் விண்ணில்


அன்புள்ள பைந்தமிழ்ச் சோலைப் பாவலர்களே...!
இந்த வாரத்தின் ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பேரானந்தம் அடைகிறேன். இதோ இவ்வாரத் துளி

12 Nov 2015

பாட்டியற்றுக - 12



நண்பர்களே.! கவிஞர்களே.! 
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 12" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***
பாட்டியற்றுக - 12

பாட்டியற்றுக 11இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே! கவிஞர்களே! வணக்கம்.!
பாட்டியற்றுக 11 இன் தொகுப்பு, அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல கவிஞர்கள் நன்கு தேர்ச்சியடைந்து விட்டனர் என்பது இப்பயிற்சியில் மிகக் குறைவான திருத்தங்களே இருந்தன. என்பதனால் அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தோம் இது பைந்தமிழ்ச் சோலையின் அனைத்துப் பங்கேற்பாளரும் பெருமை கொள்ள. வேண்டிய சாதனை.
தொகுப்பைப் படிக்கும் அன்பர்கள் பங்கேற்ற கவிஞர்களை வாழ்த்தினால் ஊக்கமாக இருக்கும்.
நன்றி!!!

பாட்டியற்றுக தொகுப்பு -11
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

7 Nov 2015

முயன்று பார்க்கலாம்.: 1 இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே! கவிஞர்களே! 
மிகவும் கடினமான இதழகல் வெண்பா முயற்சியில் பல கவிஞர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். சிலர் மிகவும் முயன்றும் இயலவில்லை, என்றாலும் நாளடைவில் செம்மையான பயிற்சியின் மூலம் வெற்றிடைவர். முயற்சி திருவினையாக்குமன்றோ? பங்கேற்ற அனைவருக்கும் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். வழக்கம் போலவே, இதில் கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் கவிஞர்கள் அனுப்பிய வரிசைமுறைக்கேற்பவே கொடுக்கப்பட்டது. தரவாரியாகக் கொடுக்கப்பட்டதன்று. படித்துப் பார்த்து வாழ்த்துங்கள். அது அனைவருக்கும் ஊக்கமாக அமையும்.

தமிழன்புடன் பாவலர் மாவரதராசன் 
*** முயன்று பார்க்கலாம் - 1  இதழகல் பாக்கள். ****

2 Nov 2015

கதம்பச் சிந்து



கதம்பச் சிந்து 

கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நடக்கும் உரையாடல்.
கணவனின் விடைகள் "காவடிச் சிந்து வகையாகவும்,
மனைவியின் வினாக்கள் பலவகைச் சிந்துப் பாடல்களாகவும் உள்ள "கதம்பச் சிந்து

பாட்டியற்றுக 11


பாட்டியற்றுக - 11 

நண்பர்களே.! கவிஞர்களே.! 
அறிஞர் பலரும் பாராட்டும்  பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 11" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
        *** *** *** *** 
பாட்டியற்றுக - 11

31 Oct 2015

பாட்டியற்றுக - 10



நண்பர்களே.! கவிஞர்களே.!
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 10" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***

30 Oct 2015

பாட்டியற்றுக 10 இன் தொகுப்பு




அன்பு நண்பர்களே கவிஞர்களே வணக்கம் !

பாட்டியற்றுக தொகுப்பு 10
அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல கவிஞர்கள் நன்கு தேர்ச்சியடைந்து விட்டனர் என்பது இப்பயிற்சியில் மிகக் குறைவான திருத்தங்களே இருந்தன. என்பதனால் அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தோம் இது பைந்தமிழ்ச் சோலையின் அனைத்துப் பங்கேற்பாளரும் பெருமை கொள்ள. வேண்டிய சாதனை.
தொகுப்பைப் படிக்கும் அன்பர்கள் பங்கேற்ற கவிஞர்களை வாழ்த்தினால் ஊக்கமாக இருக்கும்.
நன்றி!!! 


28 Oct 2015

முயன்று பார்க்கலாம் - 1





முயன்று பார்க்கலாம் - 1
நண்பர்களே.! இதோ முதல் பயிற்சி.

பாடல்களை நன்கு ஆழ்ந்து படித்துப் பின் எழும் ஐயங்களைக் கருத்துப் பகுதியில் கேளுங்கள். (பாடலைப் பற்றி உங்கள் உணர்வையும் பகிரலாம்.)

24 Oct 2015

சிலேடை வெண்பா - இரட்டுறமொழிதல்


நண்பரும், கவிஞருமான திரு.Venkatesan Srinivasagopalan அவர்களின் ஓயாத மடக்கு, சிலேடை வெண்பாப் பதிவுகளைப் பார்த்து, அதனால் மகிழ்ந்த என் உள்ளத்தெழுந்த ஓர்
"‪#‎இரட்டுறமொழிதல்‬ 
இப்பாடலை அன்னாரின் தமிழ்ப்பணிக்குப் படையலாக்குகிறேன்.
வெங்கடேசனுக்கும்.- மீனுக்கும்
(இன்னிசை வெண்பா)
*******-**********-*****
ஊனடங்கும் தோல்மிளிரும் ஓய்வின்றிக் கண்டுஞ்சாத் 
தான்மடங்கிச் சேர்ந்திரட்டும் தண்ணென் றமிழ்தமாம்
பொங்குகடல் தானீந்தும் பொற்சிலையே இப்பாரில்
வெங்கடேசன் மீனாம் விளம்பு.!

வெங்கடேசன்.:
1. உண்ணுதல் மறந்து பாவடிப்பார்
2. அவருடைய பாக்கள்.(தோலெனின் 
பாட்டு.) மிளிரும்.
3. கண்ணுறக்கம் துறந்து பாவடிப்பார்.
4. மடக்குப் பா, இரட்டுற மொழிதல் 
எழுதுவார்.
5. தமிழ்க் கடலில் (அவருள்ளம்.) நீந்தும்.
மீனுக்கு.:
1. உணவில் உண்ணுமாறு அடங்கும்.
2. மேல்தோலாகிய செதிள் மிளிரும்.
3. கண்கள் மூடாது. (எப்போதும்.)
4. மடங்கி,வளைந்து நீந்தும். 
துணையுடன் இணைந்து 
இரண்டாகக் காட்சித்தரும்.
5. குளிச்சியான கடலில் வாழும்.
(மற்றவர்களும் என்னை ஈர்த்தவர்களே. அனைருக்கும் அன்பைக் காணிக்கையாக்குகிறேன்.)
தமிழன்புன்,
பாவலர் மா. வரதராசன்

23 Oct 2015

பாட்டியற்றுக : 9 இன் தொகுப்பு.



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 9 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். 
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக:9

20 Oct 2015

பாட்டியற்றுக - 9


நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 9" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***
ஆசிரிய விருத்தம் (வேறு)
விளைநிலத்தை அயலானுக் 
களித்துவிட்டால் அதன்பின்னர்
விளைச்ச லின்றி
இளைத்துவிழும் நிலைதோன்றும்
அயலானைக் கையேந்தும்
இழிவே மிஞ்சும்.
உளைந்திடுமென் உள்ளத்தோ.(டு.)
இவ்விழிவை உரைத்திட்டேன்
உங்கள் முன்னே
விளைந்திடுமோர் நலன்வேண்டி...
பிழையென்றால் உரைப்பீரே
மேன்மை யோரே.!
--பாவலர் மா.வரதராசன்

19 Oct 2015

3) பழமோ வண்டோ ?


அன்புடைப் பாவலர்க்கு வணக்கம் !
இந்த வார ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு எய்துகிறேன். இதோ இவ்வாரத் துளி
3) பழமோ வண்டோ ?

யாப்பறிவோம் 6 செய்யுளியல்


செய்யுளியல் !
இனிச் செய்யுளியலை நோக்குவோம். மேற்சொன்ன செய்யுள் உறுப்புகள் ஆறையும் பயன்படுத்தி இயற்றப்படுவதே மரபுச் செய்யுள் ஆகும்.
மரபுப்பாக்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே முறையாக யாக்கப்பட்டன என்பதற்குத் தொல்காப்பியத்தின் பொருளதிகாரச் செய்யுளியலே சான்றாகும்.
யாப்பதிகாரம் என்றபெயர் பெறுமளவுக்கு மிகுதியான நூற்பாக்கள் செய்யுளியலில் இடம் பெற்றிருந்தாலும் இப்போதைய நிலையில் சிலநூற்பாக்கள் கூறும் இலக்கண விதிகள் வழக்கிழந்து போயின.
நான்கு வகை அசைகளைத் தொல்காப்பியர் கூறுகிறார்.
நேரசை,
நிரையசை,
நேர்பசை,
நிரைபசை 

2, தலைவனுந் தூதனும்


அன்பர்களே ....
தங்களை இந்த இரண்டாவது ‪#‎இலக்கியத்_தேன்துளிகள்‬ தொடரில் சந்திப்பதில் பேரார்வம் கொள்கிறேன்
.
2) தலைவனுந் தூதனும்

16 Oct 2015

பாட்டியற்றுக 8 இன் தொகுப்பு.



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 8 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். 
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 8

12 Oct 2015

பாட்டியற்றுக - 8


நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 8" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
ஆசிரிய விருத்தம் (வேறு)

தாயவள் தானே தெய்வமென் றெண்ணித் 
தயக்கமி லாதுரைப்பேன்
சேயடிப் போற்றிச் சிந்தையில் நிறைத்துச்
சேதிகள் கூறிடுவேன்
வேய்ங்குழ லோசை மேன்மையைப் போலே
வேண்டிய வாறெல்லாம்
வாய்த்திடு மிங்கே தாயினைப் பணிந்தால்
வடிவினைப் பணிந்தேனே.!

பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***
கருத்தூன்றுக.:
ஆசிரியப் பாவின் இனமாகிய விருத்தம் இக்காலத்திற்கு மட்டுமன்றி நம் இலக்கிய வரலாற்றின் பெரும்பகுதியைத் தன்னகத்தே கொண்டவோர் பாவினமாகும். இன்று பல மரபு கவிஞர்களாலும் இயற்றப்பெறும் பாவினமான "ஆசிரிய விருத்தம்." அறுசீர்கள் தொடங்கிப் பல சீர்கள் வரையிலான அமைப்பில் முற்காலத்தில் பாடப்பெற்றன.தற்கால வழக்கில் மிகச் சிலவே நடைமுறையில் உள்ளன.நம் சோலையின் இப்பகுதியின் வாயிலாக நாம் பல்வேறு விருத்த வகைகளைக் கையாண்டு மரபைக் காப்போம்.
மேற்கண்ட பாடல் "அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." (விளம்,மா,விளம்,மா,விளம்,காய்)ஆகும்.
பொது இலக்கணம்.
* ஆறு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த இரண்டு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று, (ஆறு சீர்களை ஓரடியாகத் தொடர்ச்சியாகவும் எழுதலாம்.)
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* ஓரடிக்கு " விளம், மா, விளம்,மா,விளம்,காய்." என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிந்தும்
வருவது "அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.
விளச்சீரெனில் (முதல்சீர்.)கூவிளம், கருவிளம் இரண்டில் எதுவும் வரலாம்
மாச்சீர் எனில்தேமா, புளிமா எதுவும் வரலாம். காய்ச்சீர் எனில் எந்தக் காயும் வரலாம்.
இவ்வகையான ஒரு விருத்தத்தை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதி அனுப்புங்கள்.

9 Oct 2015

பாட்டியற்றுக : 7 இன் தொகுப்பு.



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 7 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 7
*ஆசிரிய விருத்தம்*

5 Oct 2015

பாட்டியற்றுக - 7


வணக்கம்  நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 7" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
ஆசிரிய விருத்தம்

வாழ்க்கையே போராட் டந்தான்
வருமிடர் நீரோட் டந்தான்
தாழ்வையே நினைந்து நைந்து
தளர்ந்துபோய் துவண்டி டாமல்
வாழ்ந்திட நினைத்தால் போதும்
வானமும் கையில் சேரும்
வாழ்ந்திட வேண்டும் இந்த
வையகம் வாழ்த்து மாறே.!

பாவலர் மா.வரதராசன்

4 Oct 2015

1, இலக்கியத்தேன் துளிகள்



இலக்கியத்தேன் துளிகள் என்னும்
         இன்பமிகு தொடராம் இஃதை
உலகினுக்குப் படைகின் றேனே
         உதவிடுவாய் சக்தி தேவி
தலைவணக்கம் உனக்குச் சொன்னேன் 
         தமிழ்வணக்கம் உனக்குச் சொன்னேன்
நிலைபெருவாய் என்றன் நாவில்
         நீக்கிடுவாய் பிழையை நீயே !!!!

பாட்டியற்றுக : 6 இன் தொகுப்பு.




அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 6 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 6

3 Oct 2015

பாட்டியற்றுக 6




நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 6" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக : 6

யாப்பறிவோம் -4


சீர்

இனிச் “ சீர் “ என்றால் என்னவென்று பார்ப்போம்.

1.சீர் என்பதன் பொதுவான இலக்கணம் யாது? 
நேரசை நிரையசை ஆகிய இரண்டு அசைகளும் தனித்தோ அல்லது இரண்டு முதலானவை இணைந்தோ அழகுபட நயம்பட இசைத்துச் சீராகி நிற்பது சீராகும்.
செய்யுளுக்கு இசைநயத்தைத் தருவதும் செய்யுள் ஓசையை ஒழுங்கு படுத்துவதும் சீர் ஆகும்.

யாப்பறிவோம் -5 தளை ,அடி


தளை

1. தளை என்ன என்பதைக் கூறி அதன்வகைளை விளக்கிக் கூறுக?

ஒரு பாவின் ஓர் அடியில் நின்ற சீரின் ஈற்றøசையோடு வரும்சீரின் முதற்சீரைத் தளைத்து அல்லது இணைத்து பந்தமுற நிற்பது தளையாகும்.
அதாவது தளைத்து நிற்பது. சீரோடு சீரை இணைத்துச் செய்யுள் அடிகளை அமைக்கும் போது அவற்றுக்கிடையே ஏற்படும் இயைபே தளையாகும்.
பந்தம் என்பது தளையின் இன்னொரு பெயராகும்.

மரபைப் போற்று. 3



(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
....நிறைவு...

உலகத்தில் எங்கேனும் தாய்மொ ழிக்கென்(று)
          ஒருதீங்கு நேர்ந்ததென வரலா றுண்டா.?
கலகங்கள் செய்கின்றார் கயவர் கூடித்
          கனித்தமிழை ஒழித்துவிடத் துடிக்கின் றார்கள்
'மலையொன்றைச் சுண்டெலிகள் மயிரால் கட்டி
          மறுபக்கம் சாய்த்துவிட முயல்வ தைப்போல்.
உலையிட்டுத் தமிழ்ப்பொன்னை உருக்கி னாலும்
          உருமாறிப் புதிதாக உருவா குங்காண்.!

பாட்டியற்றுக : 5 இன் தொகுப்பு.



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.!

 முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.!

பாட்டியற்றுக: 5 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

நன்றி.!
***** 

பாட்டியற்றுக: 5

யாப்பறிவோம் -3


அசை

1.தனிக்குறில்! 2.ஒற்றும் 3.தனிநெடில்! 4ஒற்றும்
இனியநல் நேரசை என்பார் 1இணைக்குறில்!
2ஒற்றும்! 3.குறில்நெடில் 4.கூடவே ஒற்றுமே!
நிற்றல் நிரையசையின் நேர்பு

 ( நேர்பு -- மாண்பு.) இது என்பாடல்)

சென்றதொடரில் எழுத்துகளைப்பற்றிப் பற்றி ஓரளவில் தெரிந்துகொண்டோம்.

23 Sept 2015

யாப்பறிவோம்---2;2


தொடர்ச்சி ...!

இதுபோல் வள்ளுவரும் தமிழ்நெடுங்கணக்கின் முதலெழுத்தாகிய அகரத்தில் முதல் குறளைத் தொடங்கி(அகரமுதல) இறுதி எழுத்தாகிய னகரத்தில்
இறுதிக் குறளை( கூடி முயங்கப் பெறின்) முடித்திருக்கிறார்
இன்னொன்றும்
தொல்காப்பியர் கருத்துப்படி எழுத்துகள் 33 ஆகும். முதலெழுத்துகள்30. சார்பெழுத்துகள் 3. ஆகமொத்தம் 33.
தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தின் முதல் இயலாகிய நுõன்மரபில் 33 நுõற்பாக்களை மட்டுமே இயற்றி உள்ளார் என்பது கூடுதல் செய்தி.
அசைக்கு உறுப்பாகும் பதின்மூன்று எழுத்து வகைகளை இம்முதற்காரிகை பட்டியல் இடுகிறது.

1.குறில் 2. நெடில் 3. உயிரெழுத்துகள் 4.குற்றியலிகரம் 5. குற்றியலுகரம் 6.ஐகாரக்குறுக்கம் 7.ஆய்த எழுத்து 8.மெய்யெழுத்துகள் 9.வல்லெழுத்து 10.மெல்லெழுத்து 11.இடையெழுத்து 12.உயிர்மெய் 13.அளபெடை
ஆகிய பதின்மூன்றும் அசைக்கு உறுப்பாகிவரும்.