இலக்கணத்தைக் கற்பதற்கு முயன்றி டாமல்
இளையோர்கள் அதைவேம்பாய் எண்ணிக் கொண்டு
விலக்குகிறார்.,விலகுகிறர் மரபை விட்டு.
விளக்குதற்கென் றாரேனும் இருந்தால் தானே
துலங்குவழி கண்டுணர்ந்து கவிதை செய்வார்?
துணிவாக இலக்கணத்தைத் தேடிக் கற்பார்?
கலங்கரையின் விளக்காகக் கற்பிப் போர்கள்
கலக்கத்தை விரட்டுதலை முதலாய்க் கொள்க!