#சோலைக்கவியரங்கம்
கவியரங்கத் தலைவர்,
பாவலர் மா.வரதராசனின்..
"நிறைவு கவிதை "
*******************
(அறுசீர் விருத்தம்)
வாழ்வினில் போற்று தற்கு
வாய்த்தநல் வழியீ தென்று
தாழ்விலாக் கவிதை யாலே
சாற்றினர் கவிதை இங்கே
ஆழ்கடல் அலைபோல் ஆர்த்த
அருங்கவி அனைத்தும் கேட்டே
ஆழ்மனத் தின்பங் கொண்டே
அவர்களை வாழ்த்து வோமே!