வான்மீகியை மூலமாகக் கொண்டு கம்பர் தன் காப்பியத்தைப் படைக்கும் காலத்தில் பல மாறுதல்களுக்குட்பட்ட ராமன் வரலாறு அவருடைய எழுத்திலும் எதிரொலித்தது..இராமனை ஒரு மனிதனாகவே காட்டுவார் வான்மீகி. ஆனால் கம்பரின் காலத்தில் ராமன் கடவுளாக வணங்கப்பட்டிருந்தான். எனவே கம்பர் ராமனைக் கடவுளாகவே காட்டினார்.
இப்படி பல வேறுபாடுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும்,
கம்பர் பல நிலைகளில் மற்ற ராமாயண ஆசிரியர்களிடமிருந்தும் தனித்த சிறப்புடன் நிற்கிறார். அவ்வாறான ஒரு நிகழ்வைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.