தொடர்ச்சி ...!
இதுபோல் வள்ளுவரும் தமிழ்நெடுங்கணக்கின் முதலெழுத்தாகிய அகரத்தில் முதல் குறளைத் தொடங்கி(அகரமுதல) இறுதி எழுத்தாகிய னகரத்தில்
இறுதிக் குறளை( கூடி முயங்கப் பெறின்) முடித்திருக்கிறார்
இன்னொன்றும்
தொல்காப்பியர் கருத்துப்படி எழுத்துகள் 33 ஆகும். முதலெழுத்துகள்30. சார்பெழுத்துகள் 3. ஆகமொத்தம் 33.
தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தின் முதல் இயலாகிய நுõன்மரபில் 33 நுõற்பாக்களை மட்டுமே இயற்றி உள்ளார் என்பது கூடுதல் செய்தி.
அசைக்கு உறுப்பாகும் பதின்மூன்று எழுத்து வகைகளை இம்முதற்காரிகை பட்டியல் இடுகிறது.
1.குறில் 2. நெடில் 3. உயிரெழுத்துகள் 4.குற்றியலிகரம் 5. குற்றியலுகரம் 6.ஐகாரக்குறுக்கம் 7.ஆய்த எழுத்து 8.மெய்யெழுத்துகள் 9.வல்லெழுத்து 10.மெல்லெழுத்து 11.இடையெழுத்து 12.உயிர்மெய் 13.அளபெடை
ஆகிய பதின்மூன்றும் அசைக்கு உறுப்பாகிவரும்.