பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

23 Sept 2015

யாப்பறிவோம்---2;2


தொடர்ச்சி ...!

இதுபோல் வள்ளுவரும் தமிழ்நெடுங்கணக்கின் முதலெழுத்தாகிய அகரத்தில் முதல் குறளைத் தொடங்கி(அகரமுதல) இறுதி எழுத்தாகிய னகரத்தில்
இறுதிக் குறளை( கூடி முயங்கப் பெறின்) முடித்திருக்கிறார்
இன்னொன்றும்
தொல்காப்பியர் கருத்துப்படி எழுத்துகள் 33 ஆகும். முதலெழுத்துகள்30. சார்பெழுத்துகள் 3. ஆகமொத்தம் 33.
தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தின் முதல் இயலாகிய நுõன்மரபில் 33 நுõற்பாக்களை மட்டுமே இயற்றி உள்ளார் என்பது கூடுதல் செய்தி.
அசைக்கு உறுப்பாகும் பதின்மூன்று எழுத்து வகைகளை இம்முதற்காரிகை பட்டியல் இடுகிறது.

1.குறில் 2. நெடில் 3. உயிரெழுத்துகள் 4.குற்றியலிகரம் 5. குற்றியலுகரம் 6.ஐகாரக்குறுக்கம் 7.ஆய்த எழுத்து 8.மெய்யெழுத்துகள் 9.வல்லெழுத்து 10.மெல்லெழுத்து 11.இடையெழுத்து 12.உயிர்மெய் 13.அளபெடை
ஆகிய பதின்மூன்றும் அசைக்கு உறுப்பாகிவரும்.

யாப்பறிவோம்---2;1



யாப்பறிவோம்---2;1

1.யாப்பிலக்கணம் என்றால் என்ன? விளக்குக
தமிழ்மொழியின் இலக்கணம் ஐவகையாகப் பாகுபடுத்தப்படுகிறது. 1.எழுத்திலக்கணம் 
2.சொல்லிலக்கணம் 
3.பொருளிலக்கணம் 
4.யாப்பிலக்கணம் 
5. அணியிலக்கணம்.

இவற்றுள் யாப்பிலக்கணம் தமிழில் மரபுப்பாக்களை இயற்றுவதற்கு பயன்படும் இலக்கணம் ஆகும்.
தமிழ்மொழியின் இலக்கியக்கட்டமைப்பை, பாட்டின் ஓசை ஒழுங்குகளை யாப்பிலக்கணம் வரையறை செய்கிறது.

மரபைப் போற்று 2


தொடர்ச்சி...

நன்றாகச் சிந்தித்துப் பாரீர் இந்த
       ஞாலத்தில் முதன்மொழியாய்ச் சிறப்ப டைந்து
பன்னூறு பனுவல்கள் கொடுத்த தென்றால்
       பாரெங்கும் அம்மொழியே ஓங்க வேண்டும்.
பொன்றாத வழிபோற்றி வாழ்வோ மானால்
       புரையோடிப் போய்விட்ட புண்ணென் றாவோம்
இன்றிங்குப் புதுக்கவியைத் தம்ம னத்தில்
       ஏற்கின்ற நண்பர்கள் உணர்தல் வேண்டும்.!

யாப்பறிவோம் 1



தமிழ் வணக்கம் !

எழுத்தும் அறியேன்யான் யாப்பும் அறியேன்
பழுத்த புலவர்  பலரிருக்கப் பாவலர் 
என்னை  இழுத்திட்டார்! இப்பணியைச் செய்யவிட்டார்!
அன்னைத் தமிழே அருள்!

தொல்காப்பியம்--- பொருளதிகாரம்--- செய்யுளியல்

21 Sept 2015

பாட்டியற்றுக 5




நண்பர்களே.! கவிஞர்களே.!
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 5" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!

***** ***** *****
பாட்டியற்றுக : 5

நேரிசை ஆசிரியப் பா
***************************
ஆங்கில மென்னும் அயல்மொழிப் பிடியில்
தூங்கிடும் நிலைமை துகள்துக ளாகத்
தெறிபட வுடைக்கும் செம்மையைத் தருக
நெறியுடன் வாழும் நிலையினில் சேர்த்த
செந்தமிழ்த் தாயே.! செந்தமிழ்த் தாயே.!
வந்தெனக் கோர்வரம் வழங்கிட வேண்டும்
தன்னிக ரில்லாத் தமிழினம்
நன்னிலைப் பெற்றே நனிசிறந் திடவே.


20 Sept 2015

யாப்பறிவோம்




முன்னுரை
தொல்காப்பியம்
தமிழ்மொழியில் நமக்குக் கிடைத்த முதல்நுõலும் முழுமையான நுõலும் தொல்காப்பியம் ஆகும்.ஒருமொழிக்கு இலக்கணம் எழுத விரும்பும் ஓர் ஆசிரியர் பொதுவாக அம்மொழியின் எழுத்துகளுக்கும்(Phonology) அவ்வெழுத்துகளால் உருவாகும் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும்தாம்(Morphology) இலக்கணம் படைப்பார்.
தமிழ் மொழியின் முதல்நுõலான தொல்காப்பியம் தமிழன் பேசிய தமிழ்மொழிக்கு மட்டும் இலக்கணம் படைத்ததோடு நில்லாமல் அவனது வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த பெருமையை உடையது.
தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் தமிழனின் வாழ்வியல் பற்றி இலக்கியச் சுவைபடப்பேசுகிறது.அதனால்தான் நமது முதல் பாட்டனாராகிய தொல்காப்பியரை நாம் போற்றி மதித்து வணங்குகிறோம்.
இதனால்தான் என்னுடைய பேராசிரியர் மூதறிஞர் வ.சுப மாணிக்கனாரும் “தொல்காப்பியம் ஓர் இலக்கண இலக்கிய நுõல்“ என்பார்.
தமிழ்மொழியில் தோன்றிய அனைத்து இலக்கிய இலக்கணநுõல்களுக்கும் அவற்றின் வகைமைகளுக்கும் அடிப்படையான நுõல் தொல்காப்பியமே.
(தொல்காப்பியத்தின் மேல் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடு காரணமாகவும் தொல்காப்பியர்மேல் எனக்கு ஏற்பட்ட மரியாதை காரணமாகவும் என்முதல் மகனுக்குத் “ தொல்காப்பியன்“
எனப்பெயர் சூட்டினேன்.)

தொல்காப்பியத்தின் முப்பெரும்பிரிவுகள்
தொல்காப்பியம் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டு விளங்குகிறது.

1.எழுத்ததிகாரம்( Phonology)
2.சொல்லதிகாரம்((Morphology)
3.பொருளதிகாரம்(Matters)

பாட்டியற்றுக 4 இன் தொகுப்பு.


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 4 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 4

பாட்டியற்றுக 4‬



நண்பர்களே.! கவிஞர்களே.!
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 4" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!

***** ***** *****
பாட்டியற்றுக : 4

பாட்டியற்றுக 3 இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முதலிரு பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 3இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!

***** ***** *****
பாட்டியற்றுக: 3

பாட்டியற்றுக 3




அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.!
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 3" இதோ.!
முன்னிரண்டு பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!


பாட்டியற்றுக : 3
வெள்ளொத் தாழிசை

பாட்டியற்றுக 2 இன் தொகுப்பு.



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முதல் பயிற்சியைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.

பாட்டியற்றுக:2 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!


பாட்டியற்றுக:2
வெண்பா. (ஒன்றில் நான்கு.)

பாட்டியற்றுக 2



பைந்தமிழ்ச் சோலையின் மரபு மலர்களுக்கு அன்பு வணக்கம். பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான பாட்டியற்றுக பகுதியின் இரண்டாவது பயிற்சியிது. முன்போல் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும். பெரும்புலவர்களும் கலந்து கொண்டால் இளந்தலைமுறையினர்க்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!

**********-****-********
வெண்பா (ஒன்றில் நான்கு.)

பாட்டியற்றுக 1 இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.!
 பாட்டியற்றுக:1இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். 
நன்றி.!
.
 பாட்டியற்றுக,--1
(வெண் செந்துறை.)

1.இரா.கி.இராஜேந்திரன்


பாவலர் பயிற்சி பாங்குடன் பயின்று 

பாவடித் தேநாம் பயனடை வோமே.

2. Niroash G Sri Aravindh.

"இனிய பயிற்சி இன்பம் தருமே 
கனிவாம் தமிழின் கவிதை யிதுவே.!

3.வெங்கடேசன்

தமிழின் பெருமை தரணியில் பரவத்
தமிழில் மட்டும் தகவல் தருவமே!
பிறமொழி வேண்டாப் பேதை யல்லநான்
மறவோம் நம்மொழி மானிடா என்பனே!
ஒற்கம் வரினும் ஒண்டமிழ் மறவேல்
நிற்கும் உம்புகழ் நீணில மீதிலே!
என்னதான் இல்லை எந்தமிழ் மொழியில்
அன்னதைச் சொல்வீர் அயல்மொழி வெறியரே!
(புரிதலுக்காக : 'ஒற்கம்' = 'வறுமை)

4.அழகர் சண்முகம்

நல்ல பயிற்சி நாளும் தொடர்வோம்
அல்லும் பகலும் அரனைத் தொழுவோம்

5. சுந்தர புருஷோத்தமன்

நீண்டு வருதளிர் நிமலநின் கரந்தனை
பூண்ட நறுமணப் பூவணி தொடுமே.
தீண்டு மொருவிர லிடையினிற் றவழ்ந்துனைச்
சீண்ட வருமுனம் சிறுநகை யுகுமே.
மூண்ட நாணத்துள் முகமறைத் திடுவாய்
ஈன்ற மனமிது எழிநகை யுறுமே.
நீண்ட விழியினால் நிகழ்விளை வென்ன
தூண்டு மகந்தனி லொருபர வசமே.

6.ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை

சிந்தையில் நினையா சீர்பெரு கருத்தெலாம் 
வந்தித் திங்கே வரிசையில் நிற்குதே!
எளிமையாய் இலக்கணம் இப்படிச் சொன்னால் 
தெளிவாய் அனைவரும் தேன்கவி தருவரே!
தமிழில் படித்துத் தமிழில் பேசத் 
தமிழனை ஆளத் தரணியில் உளரோ?

 7. விவேக் பாரதி

பாட்டால் தமிழ்மொழி பாரினில் ஓங்கிட 
பாட்டி யற்றினேன் பாரதி காக்கவே !
மண்ணில் கவிதைகள் மன்னிப் பெருகிடப் 
பண்ணும் படைக்கிறேன் பார்வதி காக்கவே !

8. நடராஜன் பாலசுப்பிரமணியன்

கண்ணம் குழியில் காவி தடவி
வண்ணம் குழைத்து வாயில் உரசி
பின்னல் குழலைப் பாங்காய் தவிர்த்து
முன்னர் விழுந்து மேவும் முடியே
பெண்கள் விழிதான் பாயும் கணையாம்
கண்ணல் மொழிதான் காதல் மொழியாம்
மின்னல் இடையால் மோகம் பிறக்க
தன்னால் மனம்தான் தாவிடும் உடனே.

9. கலாம் ஷேக் அப்துல் காதர்

அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும்
வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும்
நம்பி இறங்கு நலமே கிடைத்திடும்
வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்
நோக்கம் இருந்தால் நெருங்குமே சக்திதான்
ஊக்கம் குறைந்தால் உடையுமே யுக்திகள்
நல்ல மனத்தில் நலங்களே தங்கிடும்
பொல்லாப் பகையால் பிளவுகள் பொங்கிடும்.

10. அர.விவேகானந்தன்

அன்பே வடிவாய் அழகே உருவாய்
என்பேர் தந்தாய் என்றும் வாழியே
உலகே போற்றும் உன்னைப் பணிமின்
விலகிடும் துன்பம் விரைந்தே வானில்
மண்ணில் நாளும் மாதவம் செய்தே
கண்ணில் வைத்து காப்போம் என்றுமே

11.இளம்பரிதியன்

தமிழென் உடலே தமிழென் உணர்வே 
தமிழென் குருதி தமிழென் உயிரே!
அமிழ்தென் உணவும் அனைத்தும் அவளே 
இமிழ்திரை ஞாலம் எனக்கென் தமிழே!!
குமிழிடு மெண்ணமும் குறையிலாச் சொல்லால் 
அமிழ்தாய்த் தரவே அருள்வா ளவளே!!
திமிருடன் செந்தமிழ்த் தேர்தனில் செல்வோர் 
தமிழ்க்கென வாழ்பவர் தாமெம் உறவே...

12.சியாமளா ராஜசேகர்

விண்ணில் உலவும் மேகம் கண்டால் 
மண்ணில் என்மனம் மகிழ்ந்து துள்ளுதே !
வண்ண நிலவின் வனப்பில் இதயமும் 
செண்டாய்ப் பூத்திட தேன்மழை சிந்துதே !
கண்ணில் கண்ட காட்சிகள் யாவும் 
வண்ணக் கனவாய் மனதில் உதிக்குதே !
பண்ணுடன் பாவும் பைந்தமிழ்ச் சோலையில் 
வெண்செந் துறையாய் மிளிர்ந்து மணக்குதே !

13.சுரேஷ் சீனிவாசன்

இக்கணம் இலக்கணம் இல்லை என்னிடம்
தக்கநல் ஆசான் தேடிக் கொள்வனே.

14.அஷ்பா அஷ்ரப் அலி

வாழுங் காலம் வாய்மை யுடனே
வாழும் முன்னை வாழ்த்தும் உலகே
நாளுங் காணும் நளிந் தார்க்கீயக்
கூழுக் அலைவோர் குறையும் மிங்கே

15.நாகினி கருப்பசாமி

கொஞ்சமும் தீராக் கோபம் உறவினில்
வஞ்சமும் நித்தமும் வற்றா ஆறே!
அன்பும் குறைவிலா அறமும் இனித்திடும்
பண்பில் ஒழுகப் பயின்றிடு மனமே!
இஞ்சியும் சுக்கும் இடித்தே தேனுடன் 
கஞ்சியும் தந்தால் கரைந்திடும் நோயே!
பஞ்சும் நெருப்பும் பகையென நீங்கிடின்
நெஞ்சது குத்தும் நெருஞ்சி முள்ளே! .

16. முனைவர். பத்மநாபன்

இலக்கணம் இன்றிக் கவிதை இயற்றல்
மலர்கள் இன்றியே மாலை தொடுத்தல் !



பாட்டியற்றுக 1



பைந்தமிழ்ச் சோலை நண்பர்களே.!

வணக்கம். நம் சோலையின் பணிகளுள் ஒன்றாக, மரபில் பாடல் இயற்றும் பயிற்சி இன்று தொடங்குகிறது. அனைவரும் பங்கு பெறலாம். இப்பதிவின் கமாண்ட் பகுதியிலேயே உங்கள் பாடலை எழுதுங்கள். அவரவர் பாடலுக்கும் கருத்துரைகளும், பின்னூட்டங்களும் இடப்படும். தவறாக எழுதியிருந்தால் மறுபடியும் எழுதலாம். பிழைகளைச் சுட்டினால் சினம் வேண்டா. பாடலைச் செம்மைப்படுத்தவே பிழையைச் சுட்டுவோம்.

ஒவ்வொரு பாட்டியற்றுக பதிவுக்கும் அப்பாடலின் பொது இலக்கணம் "கருத்தூன்றுக." பகுதியில் தரப்படும். அதை நன்கு படித்துப் பின் பாட்டியற்றவும். நன்றி.!

"வெண் செந்துறை."
*********-***************
நாளும் தமிழை நண்ணியே வாழும் 
தாளைப் பணிந்தால் தகுவுயர் வுறுமே.!
★★★
கருத்தூன்றுக.!
இரண்டு அடிகளால், ஈரடியும் ஓரெதுகை பெற்று, ஒன்றாம் மூன்றாம் சீர்களில் (பொழிப்பு மோனை.) மோனை பெற்று, இயற்சீர்களால், ஈற்றடி ஏகாரத்தில் முடிவது *வெண் செந்துறை* ஆகும்.
நீங்கள் விரும்பிய பொருளில், எட்டடிகளுக்கு மிகாமல் பாட்டியற்றுங்கள் நண்பர்களே.!
*பாவலர் மா.வரதராசன்*

காதல் இலக்கணம்



பூங்காவில் என்னவளும் காத்தி ருந்தாள்
           புத்துணர்வாய் அவளெதிரில் நான மர்ந்தேன்
தாங்காத காதல்தீ தகித்த தாலே
          தழுவுதற்கு முற்பட்டேன் தடுத்தாள் அத்தான்,
பாங்கான இலக்கணத்தின் பாவ லர்நீர்
          பலஅய்யம் எனக்குண்டு தீர்ப்பீர். என்றாள்
மாங்காயை வேண்டிவந்தேன் தேனை யூற்ற
          மகிழ்ச்சியிலே திளைத்தவனாய் கேள்கேள் என்றேன்.!

அறிவினுக் கில்லை அகவை (நேரிசை வெண்பாக்கள்)




சிறியனென் றென்னைச் சிரித்திக ழாதீர்
அறிவினுக் கில்லை அகவை - உறைநோய்
நிறையழிக்கும் புல்லின் நிறையறிவீர் மண்ணில்
மறைந்துளதே வித்துள் மரம்.!

மேடேறிப் பார்க்குங்கால் மேதினியி லெல்லாமே
ஈடாகத் தோன்றும் எழிலார்ந்தே - தேடியுணர்
ஆன்ற அறிவில் அனைத்தும் இணையன்றோ
சான்றோரில் மூத்தோரென் றில்.!

17 Sept 2015

மரபைப் போற்று 1





கல்தோன்றி மண்தோன்றா முன்பே தோன்றிக்
         காட்டாக வாழ்ந்தயினம் தமிழ ரென்று
சொல்கின்ற கூற்றினிலே துலங்கும் மேன்மை
         சோம்பேறித் தமிழனுக்குப் புரியா மல்தான்
கொல்கின்றான் தாய்மொழியாம் தமிழை மெல்ல
         குறைபட்டுக் கொள்கின்றான்...வளர்ச்சிக் கென்று
பல்துறையில் தமிழினிலே சொற்கள் இல்லை
         படிப்பிற்கும் ஏற்றமொழி இல்லை யென்று

யமக வெண்பா: (மடக்கு)



இடுவா யரிதார மென்னண்ப வாழ்வில்
இடுவா யரிதார மென்றாள் - விடுவனும்
மந்தி யவதார மேகொண்டா னைநீங்கின்
மந்தி யவதார மே.!

*** *** ***