அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.!
பாட்டியற்றுக:01 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் பயிற்சியின் தொகுப்பு இது.
பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--01
(குறள்வெண் செந்துறை)
1. கவிஞர் Anbudan Ananthi
சிவமே சீவனே சிந்தையில் நின்றவா
தவமே புரிவேன் தருவாய் அருளே!
★
2.கவிஞர் Sachithananthan Kuganathan
வேழ முகத்து விநாயகா வுன்பதந்
தாழப் பணிந்தேன் தமிழினிற் பாடவே!
★
3.கவிஞர் Umaipalan Thiyagaraja
உமையொரு பாகம் உடையாய் நீயே
அமைதி தருவாய் அகிலத் தரனே!
★
4.கவிஞர் Swarna Sabarikumar
சங்கரன் மனமகிழ் சங்கரி உன்னருள்
எங்களை அரண்போல் என்றுமே காக்கவே!
★
5.கவிஞர் CA Manimaran Kathiresan
வேலுடன் நின்றவா வேதனை அகற்றவா
வேலும் மயிலும் வேண்டும் துணையே!
★
6.கவிஞர் Kannan Balanethiram
மனத்திலே திடமும் மகிழ்வுட னுளமும்
தினமுமே தருவாய் தில்லையம் பலனே
★
7.கவிஞர் க.சந்தோஷ்குமார்
வினையின் பயனால் விளைந்தேன் முருகா
வினைகள் ஒழித்துயர் வீடளித் தேற்கவே
★
8.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி
ஏறு முகமாய் ஏற்றி விடவே
ஆறு முகமே அருளைத் தருகவே
★
9.கவிஞர் திலகவதி
மாயக் கண்ணனே மரகத வண்ணனே
காயம் பொய்யே காத்திடு நீயே
★★★
No comments:
Post a Comment